சென்னை: அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவு அளித்துள்ளார். 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத் துறை ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
