- யூனியன் அரசு
- தமிழ்நாடு அரசு
- STBI
- சென்னை
- நிலை
- பொதுச்செயலர்
- ஏகே கரீம்
- வக்ஃப்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வாக்ஃப் பலகை
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் புதிய வக்ப் திருத்தச் சட்டக் கெடுபிடிகளால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வக்ப் சொத்துகள் பறிபோகும் பேராபத்து உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும், வக்ஃப் வாரியமும் காட்டி வரும் மெத்தனப் போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வக்ப் சொத்துகளைப் பாதுகாக்க உடனடியாக முதல்வவ் களமிறங்க வேண்டும்.
உமீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்ட அனைத்து வக்ப் சொத்துகளையும் பதிவு செய்ய, வக்ப் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாக தமிழக அரசு உடனடியாகக் கூடுதல் கால அவகாசத்தைப் பெற வேண்டும்.மேலும், பாரம்பரிய பயன்பாட்டு வழி அடக்கஸ்தலம், தர்காக்கள் மற்றும் மசூதிகளைக் கண்டறிந்து, அவற்றுக்குரிய பட்டா மற்றும் வருவாய் ஆவணங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்க வருவாய்த்துறை மூலம் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
தமிழக வக்ப் வாரியப் பதிவுகளையும், மாநில வருவாய்த்துறையின் நிலப் பதிவேடுகளையும் முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்து, ஆவண முரண்பாடுகளை அரசு நிர்வாகமே முன்நின்று சரிசெய்து உடனடியாக உமீத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும், ஒன்றிய அரசின் எவ்விதத் தவறான டிஜிட்டல் ஆவணக் கெடுபிடிகளும் தமிழக வக்ப் நிலங்களைப் பாதிக்காத வண்ணம், அவற்றுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
