திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் பழைய பஸ் நிலையம் அருகே ஸ்ரீநாத் (40) என்பவர் நடத்திவரும் ஒரு ஜோதிட நிலையத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள ஒரு பீரோவில் மறைத்து வைத்திருந்த 6 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஜோதிடர் ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
