தூத்துக்குடி, ஜூன் 3: மெஞ்ஞானபுரம் பகுதியில் திருச்செந்தூர் தொகுதி தவெக வேட்பாளர் ஜெ.முருகன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஜெ.முருகன், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதேபோல் கல்லாமொழி, சீர்காட்சி, நயினார்பத்து, ஜேஜே நகர் மற்றும் தேரியூர் முதல் மெஞ்ஞானபுரம் வரையிலான பகுதியில் வீதி வீதியாக சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தலில் பணியாற்றிய தவெகவினருக்கும் நன்றி கூறினார். இதில் உடன்குடி நகரச் செயலாளர் சசிகுமார், உடன்குடி கிழக்கு ஒன்றியம் பத்ரி பிரசாத், தொண்டரணி மகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
