திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 3: தஞ்சாவூர் தமிழ்நாடு மின்பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்து வீரகண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி,
நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளுர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதூரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் வரும் ஜூன்5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
