டெல்லி: விடைத்தாள் மறுமதிப்பீடு குளறுபடியை தொடர்ந்து சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளரை இடமாற்றம் செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவு அளித்துள்ளது. மறுமதிப்பீடு, மதிப்பெண் சரிபார்ப்புக்கான OSM முறையில் குளறுபடி காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட், க்யூட் தேர்வை தொடர்ந்து சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்த குளறுபடி தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது திறன்வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் ராதா சவுகான் தலைமையில் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
