ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. கடந்த 8 மற்றும் 14ம் தேதி எல்லை தாண்டியதாக கைதான மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்கள் மெருஹானா முகாமுக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஓரிரு நாட்களில் விமான மூலமாக தாயகம் அனுப்பி வைக்கப்படுவர்.
