ராமநாதபுரம்: பள்ளி நேரத்தில் அரசுப்பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி மாணவர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சிலுவைபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன், பள்ளி வேலைநாள் அன்று மாணவர்களை சீருடையுடன் அழைத்து வந்ததாகக் கூறி, வழக்குப்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
