சிதம்பரம் அருகே பால்வார்த்துண்ணான் கிராமத்தில் நடந்த இரட்டை கொலையால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பால்வார்த்துண்ணான் கிராமத்தில் சகோதரர்களான பாலகிருஷ்ணன் (44), ராமகிருஷ்ணன் (35) ஆகியோரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: