மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

 

போடி, ஜூலை 29: போடி நகர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி குப்பிநாயக்கன்பட்டி வீர குண்டாலீஸ்வரர் கோயில் அருகே, அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (43) என்பவர், சட்டவிரோதமாக மது பாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை ெசய்வது தெரியவந்தது. அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்தனர்.

 

Related Stories: