சென்னை: தூத்துக்குடி காவல் மரணம் தொடர்பாக காவல்துறைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் மௌனம் காப்பதால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சினிமா பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள். போலீஸ் இழைத்த அநீதியை அருணாச்சலமே எடுத்துச் சொன்னதை பார்த்து நெஞ்சம் கலங்குகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
