சென்னை: நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய் போனால் என்ன என்று கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறிய செய்தி அதிர்ச்சி தருகிறது. அரசு மருத்துவமனைகளை தவெக ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி என்று கூறியுள்ளார்.
