சென்னை: காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை தர மறுக்கும் கர்நாடக முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன சட்டத்தையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறுவதா என ஈபிஎஸ் கேள்வி எழுப்பினர். 22ம் தேதி காவிரி ஆணைய கூட்டத்தில் உரிய பங்கு நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். தவெக அரசு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
