சென்னை: பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். ஜானகி அம்மா மறைந்த செய்த கேட்டு துக்கம் அடைந்தேன். எஸ்.ஜானகியின் மறைவு இந்திய திரைப்பட சங்கீத உலகிற்கே மாபெரும் இழப்பு. தன் திறமையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக் கொண்டே இருந்தார். எஸ்.ஜானகி மிகவும் கடின உழைப்பாளி, ஒவ்வொரு பாடலுக்கும் கடினமாக உழைப்பவர் என்று இளையராஜா புகழாரம்.
