உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்

மீனம்பாக்கம்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை லண்டன் புறப்பட்டு சென்றார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ஒரு வாரம் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி உயர்படித்து வந்தார். இதன் பட்டமளிப்பு விழா, வரும் திங்களன்று லண்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் தனது மனைவி கிருத்திகாவுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்கும் உதயநிதி, வரும் 18ம் தேதி சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, இப்பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, கடந்த 4ம் தேதியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் லண்டனுக்கு சென்று விட்டார். இந்த விழாவில், உயர்கல்வி பட்டம் பெறும் பேரன் இன்பநிதியை மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்துகிறார். பின்னர், லண்டன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, வரும் 18ம் தேதி மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக சென்னைக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: