டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசத்தை தேசிய தேர்வு முகமை மேலும் நீட்டித்தது. நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில் வரும் 14ம் தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி வழங்குகிறது. வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிசெய்வது, திருத்தம் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
