சுமார் ஒருமணிநேரம் போராடி, அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், மீட்கப்பட்டவர் சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த பனங்காடை சேர்ந்த ரமேஷ் (43) என்பதும், தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காலை ஏற்காடுக்கு சென்று சுற்றிபார்த்துவிட்டு, சேர்வராயன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், இரவு 8 மணியளவில் வீட்டிற்கு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்த போது அங்குள்ள திட்டில் மோதி, பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. 12 மணி நேரம் அங்கு போராடி வந்த அவரை, நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
The post ஏற்காடு மலைப்பாதையில் விபத்து 100 அடி பள்ளத்தில் 12 மணி நேரம் தவிப்பு: தொழிலாளி உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.