இந்நிலையில், நேற்று முன்தினம் ஏலமன்னா பகுதியில் வசித்து வரும் நல்லமுத்து என்பவரின் வீட்டின் கூரையை உடைத்து காட்டு யானை சூறையாடியது. இதில், ஏராளமான ஓடுகள் உடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதில் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை appeared first on Dinakaran.