பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

பந்தலூர்: நீலகிரி மாவட்ம், பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் படச்சேரி, பெருங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வீடுகள், கடைகளை, ரேஷன் கடை ஆகியவற்றை உடைத்து சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஏலமன்னா பகுதியில் வசித்து வரும் நல்லமுத்து என்பவரின் வீட்டின் கூரையை உடைத்து காட்டு யானை சூறையாடியது. இதில், ஏராளமான ஓடுகள் உடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதில் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: