×

அரூர் சிறையில் போதையில் சிக்கிய வார்டன்

சேலம்: தர்மபுரி மாவட்டம் அரூர் கிளைச்சிறையில் கடந்த திங்கள்கிழமை இரவு சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரும், கட்டுப்பாட்டு அதிகாரியுமான தமிழ்செல்வன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணியில் இருந்த சீப் ஹெட் வார்டன் அசோக் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கிளைச்சிறை கண்காணிப்பாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. வார்டன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரூர் சிறையில் போதையில் சிக்கிய வார்டன் appeared first on Dinakaran.

Tags : Arur ,Salem ,Salem Central Jail ,Superintendent ,Control Officer ,Tamil Selvan ,Arur Branch Jail ,Dharmapuri district ,
× RELATED அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்