×

அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

 

அரூர், செப்.11: அருர் சரக தடகள போட்டிகள் ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தொடங்கி வைத்தார். ஜூனியர் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் மெல்வின், தேவானந்த் ஜெரோம், கணேஷ், விஷ்ணு ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
30 மீட்டர் தடை ஓட்டத்தில் தேவானந்த் ஜெரோம் 2ம் இடமும், கணேஷ் 3ம் இடமும் பெற்றனர்.

குண்டு எறிதல் போட்டியில் மெல்லின் 2ம் இடம் பிடித்தார். சீனியர் பிரிவில், 200 மீ., ஓட்டத்தில் அப்துல் ரகுமான் 2ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரை, தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Arur State School ,Arur ,Arur Cargo Athletic Competitions ,Gopinathampatty Government High ,School ,District Chief Education Officer ,Jyoti Chandra ,Arur Government School ,Dinakaran ,
× RELATED மது விற்பனை செய்த வழக்கில் 61 பேர் கைது