இந்த பிரியாணி கடையில் உணவு தயார் செய்யப்படுவதில்லை என்பதை கண்டறிந்து உணவு தயார் செய்யப்படும் இடமான திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதிக்கு சென்று அங்கு இறைச்சி மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அந்த இடத்திலிருந்து எந்தெந்த கடைகளுக்கு பிரியாணி மற்றும் இறைச்சி வகைகள் செல்கிறதோ அந்த அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகளில் சாப்பிட்ட யாரேனும் உடல் உபாதைகளால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post 40 பேருக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி: பிரியாணி கடைக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை appeared first on Dinakaran.