முஸ்லிம் மக்கள் கழக விழுப்புரம் மாவட்ட செயலாளர் நியமனம் : நிறுவனர் ஜைனுதீயின் அறிவிப்பு.

முஸ்லிம் மக்கள் கழக விழுப்புரம் மாவட்ட செயலாளராக சையத் அலாவுதீன் என்பவரை நியமனம் செய்து நிறுவனர் ச.சு.ஜைனுதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சையத் அலாவுதீனை முஸ்லீம் மக்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளேன். உங்களது நியமனத்தை விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜா.ஷோக்கத் அலி, மாநில பொருளாளர் அ.அப்துல் காதர், மாநில இளைஞரணி தலைவர் வி.விக்ரம், மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஜை.முஹமத் யூசுப் ஆகியோர்களின் பரிந்துரையின் பேரில் இப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டு மனித நேயத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், இந்திய அரசியலமைப்பு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு முஸ்லீம் மக்கள் கழகத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அனைத்து மக்களுக்காகவும் செயல்பட வேண்டுமாய் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post முஸ்லிம் மக்கள் கழக விழுப்புரம் மாவட்ட செயலாளர் நியமனம் : நிறுவனர் ஜைனுதீயின் அறிவிப்பு. appeared first on Dinakaran.

Related Stories: