விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளனர். விஜயதசமியை ஒட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அளித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.

விஜயதசமி நாளன்று அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் மொத்தம் 2, 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தனியார் பள்ளிகளைப் போலவே ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், செவ்வாயன்று விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கினால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையால் பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்

The post விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: