கிரீன் சர்க்கிளில் சிக்னல் பகுதியில் திரும்பிய போது பின்னால் வந்த அரசு பஸ் டூவீலரில் உரசியது. இதில் நிலை தடுமாறிய ராஜகுமாரி, தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்சக்கரம் அவரது தலையின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜகுமாரி பரிதாபமாக இறந்தார். மணிவாசகம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலூரில் பரிதாபம்டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பஸ்சில் சிக்கி பலி appeared first on Dinakaran.