×

விசிக மது ஒழிப்பு மாநாடு: எடப்பாடி முடிவு செய்வார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ராமநாதபுரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்து கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை மரியாதைக்குரிய அழைப்பாகவே கருதுகிறோம். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்’ என்றார்.

The post விசிக மது ஒழிப்பு மாநாடு: எடப்பாடி முடிவு செய்வார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vizika Alcohol Abolition Conference ,Edappadi ,R. B. ,Udayakumar ,Ramanathapuram ,Former Minister ,R. B. Udayakumar ,Emanuel Sekaran ,Memorial Day ,Visica Alcohol Abolition Conference ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா