வாட் வரி உயர்வால் பஞ்சாபில் பெட்ரோல் விலை 92 காசு உயர்வு

சண்டிகர்: பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியதால் அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 92 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 88 காசுகள் அதிகரித்து விற்பனையாகிறது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹98.95 ஆகவும் டீசல் ₹89.25 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ஆம் ஆத்மி அரசு பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 90 காசுகள் செஸ் வரி உயர்த்திய நிலையில், தற்போது வாட் வரியை உயர்த்தி இருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

The post வாட் வரி உயர்வால் பஞ்சாபில் பெட்ரோல் விலை 92 காசு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: