உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ள ஓநாய்களை பிடிப்பதற்காக அம்மாநில அரசு ஆப்ரேஷன் பேடியா திட்டத்தை செயல்படுத்தி 4 ஓநாய்களை பிடித்துள்ளது. மேலும் 2 ஓநாய்களை ட்ரோன் மூலம் கண்டறிந்து, பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் வெவ்வேறு கிராமங்களை குறிவைத்து ஓநாய்கள் வேட்டையாடி வருவதால் கொந்தளித்துள்ள உள்ளூர் மக்கள், அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே ஓநாய்கள் வேட்டை தொடர காரணம் என குற்றம் சாட்டி உள்ளனர். இதனிடையே ஆட்கொல்லி ஓநாய்கள் தாக்குதலுக்கு உள்ளான இடங்களுக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்பும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
The post உத்தரப் பிரதேசத்தில் ஆட்கொல்லி ஓநாய்கள் கடித்து இதுவரை 10 பேர் பலி : ஆபரேஷன் பேடியா திட்டத்தை துவங்கியது மாநில அரசு!! appeared first on Dinakaran.