உ.பியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் மம்தாவுக்கு சந்தேகம் வேண்டாம்: காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: உபியில் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மம்தாவுக்கு சந்தேகம் வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறுகையில்,’நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 300 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறுவது சந்தேகம். தைரியம் இருந்தால், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜவை காங்கிரஸ் வீழ்த்தட்டும்’ என்றார். மம்தாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘மம்தா பார்னர்ஜிக்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அமோக வேற்றி பெறும். கருத்துவேறுபாடுகளை முழுமையாக களைந்துவிட்டு பாஜவை தோற்கடிக்க வேண்டும்’என்றார்.

பாஜவுக்கு பயந்து தனது நிலைப்பாட்டை தினமும் மாற்றி வருகிறார் மம்தா: மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் நேற்று மம்தா பானர்ஜியை விமர்சித்தார். அவர் கூறுகையில்,’ வரும் நாட்களில் பெரிய கட்சி பலவீனமடையும் என்று பாஜவும், காங்கிரசால் எதுவும் முடியாது என்று மம்தாவும் கூறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவர் இப்படிப் பேசுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மம்தா பானர்ஜி பாஜவை கண்டு பயப்படுகிறார் என்று தெரிகிறது. அதனால்தான் அவர் தனது நிலைப்பாட்டை தினமும் மாற்றி வருகிறார். இருப்பினும் திரிணாமுல் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்’ என்றார்.

The post உ.பியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் மம்தாவுக்கு சந்தேகம் வேண்டாம்: காங்கிரஸ் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: