நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு ஒன்றிய அரசு பொது விடுமுறை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நிலுவையிலுள்ள ஒரு சட்ட மசோதாவுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். நிலுவையில் உள்ள 11 மசோதாவுக்கு விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏனென்றால், சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலை பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் ஒன்றிய அரசு, அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு ஒன்றிய அரசு பொது விடுமுறை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: