இதுகுறித்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்பேரில், வியாசர்பாடி குற்றப்பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்து, கடந்த மாதம் 20ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த மங்கேஷ் நந்தகுமார் (27), சந்திரகாந்த் ஆனந்த் மானே (32), ஸ்ரீகாந்த் ஆனந்த் மானே (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த அணில் ராவ் சாகிப் படே (36), கவுரவ் பஞ்சனா மோகந்தி (38) ஆகியோரிடம் நகைகளை கொடுத்து உருக்கியதும், இதற்காக ரூ.14 லட்சம் பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், திருடுபோன நகைகளை மீட்பதற்காக கடந்த 5ம்தேதி சசிகாந்த் மானே, அணில் ராவ் சாகிப் படே ஆகிய 2 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில், அவர்களை மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அழைத்துச்சென்று நகைகளை எங்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, 2 பேரின் வீடுகளில் இருந்து சுமார் 150 கிராம் தங்க நகைகளை மீட்டனர்.
இவர்கள், தங்கத்தை நகைகளாக வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நகைகளை உருக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 150 கிராம் தங்க நகைகளை மீட்ட போலீசார், 2 பேரையும் நேற்று முன்தினம் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், சசிகாந்த் மானே மற்றும் அணில் ராவ் சாகிப் படே ஆகிய 2 பேரையும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வியாசர்பாடியில் 58 சவரன் நகை திருட்டில் இருவர் சிறையில் அடைப்பு: 150 கிராம் நகை மீட்பு appeared first on Dinakaran.