இதே நிலை நீடித்தால் இந்தியா முழுவதும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு சட்டங்களின் மூலம் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். மாநில மாநாட்டுக்கு பின்பு ஆயிரக்கணக்கான வணிகர்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள வணிகர்கள் கேரளாவில் சென்று மால் திறக்க முடியாது. ஆனால், அவர்களால் தமிழகத்தில் மால் திறக்க முடிகிறது. தமிழகத்தில் ஒரு மால் திறக்கப்பட்டால் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் அந்த பகுதியில் பாதிக்கப்படுவார்கள். எனவே, இங்குள்ள வணிகர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.
The post ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி டெல்லியில் வணிகர்கள் போராட்டம் நடத்த முடிவு: விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.