திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது லாரிக்கு பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது மோதி டேங்கர் லாரி பின்புறம் அதிவேகமாக மோதியதில் லாரியின் பின்புறம் சேதமடைந்தது. இதனால் லாரியில் ஏற்றி சென்ற 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் சாலை மற்றும் ஓடையில் வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவ்வழியாக சென்ற வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
லாரியின் டேங்கரில் இருந்து சல்ஃப்யூரிக் ஆசிட் வெளியேறுவதால் அந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களை பாதுகாப்புடன் செல்லவும் அறிவுறுத்தினர். மேலும், லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி சாலையில் வழிந்தோடும் ஆசிட்டை தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சியடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post திண்டிவனம் அருகே ஆசிட் டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் சாலையில் வழிந்தோடியதால் பரபரப்பு appeared first on Dinakaran.