எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். தருவைகுளத்தை சேர்ந்த பரலோக திரவியம், உதயகுமார் உள்ளிட்ட 12 மீனவர்கள் கைது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மாலத்தீவு கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது appeared first on Dinakaran.

Related Stories: