பாம்பன் சுவாமி கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை மீறியுள்ளனர். எனவே, வருகிற 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டப்படி கும்பாபிஷேகம் நடத்தலாம். மனுதாரர், தன் கோரிக்கை குறித்து, அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து, அதுகுறித்து வருகிற 24-ம் தேதி நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துகூறலாம். இந்த கும்பாபிஷேகத்தின் போது சட்டஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படக்கூடாது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
The post திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.