நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

சென்னை: சென்னையில் இருந்து 124 பேருடன் மதுரை புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்தபோது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. 117 பயணிகள், 7 ஊழியர்கள், 124 பேருடன் மதுரை சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெரிய அளவில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை சென்னைக்கே மீண்டும் திருப்பி அவசரமாக தரையிறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானம் பகல் ஒரு மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது appeared first on Dinakaran.

Related Stories: