மன உளைச்சலில் இருந்த புரோகிதர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: மன உளைச்சலில் இருந்த புரோகிதர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்து திருமுல்லைவாயல் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிருத்(28). புரோகிதர். இவர், ஒரு மாதத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்தபோது மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. எனவே, அதை அகற்றுவதற்காக சிஐடி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக சென்றவர். அதன் பின் அந்த கட்டியை ஆய்வுக்கு அனுப்பிய பிறகு கேன்சர் கட்டி என்பது தெரிய வந்தது.

இதனால், அனிருத் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் தேதி இரவு 8 மணி அளவில் தூங்க சென்றவர் வெகு நேரமாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை எனவே, சந்தேகம் அடைந்த குடும்பத்தினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் அளித்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மன உளைச்சலில் இருந்த புரோகிதர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: