வீட்டில் இருந்து வெளியே செல்லவிடாமல் தடுத்த தெலங்கானா போலீசுக்கு ஆரத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர முதல்வர் சகோதரி

திருமலை: வீட்டில் இருந்து வெளியே செல்லவிடாமல் தடுத்த போலீசாருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி கற்பூர ஆரத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்தார். தெலங்கானா மாநிலத்தில் தலித்தபந்து திட்டத்தில் பயனாளிகளுக்கு முதலீட்டு தொகை ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருகிறது என்று சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வேல் அடுத்த தீகுல் கிராமத்தை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்களிடம் பேசுவதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சகோதரியும் தெலங்கானா ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஷர்மிளா அங்கு நேற்று செல்ல இருந்தார்.

அப்போது ஐதராபாத்தில் உள்ள லோட்டஸ் பாய்ண்ட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஷர்மிளா வெளியே செல்லாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் ஷர்மிளா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போலீசார் அவர் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்ததால் வீட்டில் இருந்து தட்டில் கற்பூரம் வைத்துக் கொண்டு வரும்படி கூறி தன்னை வெளியே செல்லவிடாமல் தடுத்து நின்ற போலீசாருக்கு கற்பூர ஆரத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது வீட்டின் அருகே கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தனது வீட்டின் முன்பு மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்.

The post வீட்டில் இருந்து வெளியே செல்லவிடாமல் தடுத்த தெலங்கானா போலீசுக்கு ஆரத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர முதல்வர் சகோதரி appeared first on Dinakaran.

Related Stories: