பைக் மீது பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்தநர் ரவி மகன் தினேஷ் (26). இவர், பிறந்தநாள் மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து வரவேற்பு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், இதே தொழில் செய்யும் தனது நண்பரான குமரன் மகன் தினேஷ் என்பவருடன் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டையில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து வரவேற்பு கொடுத்துள்ளார். நிகழ்ச்சி முடிந்தபிறகு நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் தினேஷ் உடன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். டூ வீலரை குமரன் மகன் தினேஷ் ஓட்டி வந்தார்.

செங்கழுநீரோடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பொன்னேரிக்ரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பேருந்து, டூவீலரின் பின்புறம் மோதியது. இதில் 2 தூக்கி வீசப்பட்டனர். இதனைபார்த்த அருகில் இருந்தவர்கள், பலத்த காயமடைந்த 2 பேரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த மற்றொரு தினேஷ்க்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: