கேரளாவில் டாக்டரை தாக்கிய வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனா தாஸ் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியரான சந்தீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சாலை விபத்தில் சிக்கியதாக கூறி கொச்சி வட்டக்குன்னு என்ற பகுதியை சேர்ந்த டோயல் என்பவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர் இர்பான் என்பவரை டோயல் திடீரென தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து கொண்டு சென்றனர்.

The post கேரளாவில் டாக்டரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: