அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து தடுக்க குழுக்கள் அமைப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் அலுவலகங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும், அரசியல் கட்சியினரை கொச்சைப்படுத்தும் வகையிலும் செயல்படும் வலைதளங்களை தடுக்கக் கோரி மனு அளித்துள்ளனர். வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

The post அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து தடுக்க குழுக்கள் அமைப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: