இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குடமுழுக்கில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி அடுத்த உருவையாறு முத்துமாரி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோரும் குடமுழுக்கில் பங்கேற்றனர்.
The post தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் appeared first on Dinakaran.