இதற்கிடையே ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் கோரியதை அடுத்து பதிவெண் மாற்றுவதற்கான அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு இனி அனுமதி இல்லை என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனி உரிய தமிழக பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை.
எனவே முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பஸ்கள் 14ம் தேதி முதல் தடை: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.