இந்த நிலையில், இவரது இளைய மகன் அருண் அமுல்ராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மகன் அருள் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமல்ராஜ் இறந்து விட்டார் என்றும், அவருக்கு கண்ணீர் அஞ்சலி 27ம் தேதி மதியம் 2 மணி அளவில் இடுகாட்டில் நடைபெறும் என போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் பாலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது
இதுபற்றி, அமல்ராஜ் கூறுகையில், ‘‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்.
ஆனால், இந்த போஸ்டரை ஒட்டியது யார் என தெரியவில்லை. இந்த தகவலை எனது மகன் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். அப்போதுதான், நான் அறிந்து கொண்டேன். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்,’’ என தெரிவித்தார். உயிருடன் நடமாடி கொண்டிருக்கும் நபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காட்டாங்குளத்தூர் அருகே பரபரப்பு உயிருடன் இருக்கும் நபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் appeared first on Dinakaran.