இத்தகைய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை இக்கூட்டம் பாராட்டுகிறது.பாஜ ஆட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தமிழ்நாடு காங்கிரஸ் விரைவில் சிறு பிரசுரமாக வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டின் அடிப்படையில் கிராமங்கள்தோறும் பரப்புரை மேற்கொள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சிகளுக்கு விரைவில் செயல் திட்டம் வகுக்கப்பட இருக்கிறது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன் குமார், டில்லி பாபு, அடையாறு துரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
The post சமூக நீதியை காப்பாற்றிய நேருவை பழித்து பேசிய ராமதாசுக்கு கண்டனம்: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.