ஆர்ப்பாட்டம்

தொண்டி, டிச. 8: தொண்டி பாவோடி மைதானத்தில் நேற்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர்கள் அபுல்கலாம் ஆசாத் தலைமை வகிக்க, சலாமத் குத்ஷி வரவேற்றார். மாநில பேச்சாளர் ஜஹாங்கீர், தொகுதி பொறுப்பாளர் அப்துல்லாஹ், சமூக ஊடக அணி தலைவர் முகம்மது முஜாஹிதீன், அப்துல்மஜீத், மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீதுபாபர், மாவட்ட தலைவர் நூர்ஜியாவஹதீன், முகமது சுலைமான், தொகுதி செயலாளர் முகமது ஹனீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், மசூதி இடிப்பு குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தலைவர் அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.

Related Stories: