நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம்

நெல்லை, ஜூலை 9: நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மண்டல அலுவலக இஎஸ்ஐ துணை இயக்குநர் மற்றும் குறை தீர்க்கும் அதிகாரி அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக (இஎஸ்ஐ) நெல்லை துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டடத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மாதம் தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் நாளை (10ம் தேதி) மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. முகாமில் இஎஸ்ஐசி மருத்துவமனை கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இஎஸ்ஐ திட்ட மருந்தக, மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பயனீட்டாளர்கள் குறைகள் ஏதேனும் இருந்தால் முகாமில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: