இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதற்குள் மருத்துவமனையில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி கேமராக்கள் சூறையாடப்பட்டுள்ளன. மனசாட்சி இருந்தால் மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ் எம்.பிக்கள் மவுனமாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எந்த மாநிலங்களில் நடைபெற்றாலும் அது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் படுகொலை மட்டுமல்லாது, ஜனநாயக படுகொலை நடந்துக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்” என்றார்.
The post பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எந்த மாநிலங்களில் நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது: நடிகை குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.