செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி கைதின் போது அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது. சம்மன் கொடுத்தும் அதனைப் பெற மறுத்ததன் காரணமாகவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

The post செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: