பள்ளிக் கல்வித்துறை உத்தரவு முதன்மைக் கல்வி அலுவலர்கள் 4 பேர் பணியிட மாற்றம்: 3 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு: திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமியை சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக துணை இயக்குநராகவும், தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் சிவக்குமாரை திருநெல்வேலி முதன்மைக் கல்வி இயக்குநராகவும், திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியை தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலராகவும், தூத்துக்குடி முதன்மைக் அலுவலராக இருந்த ரெஜினியை தென்காசி முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டியை திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலராகவும், அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகனை திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதாவை விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிக் கல்வித்துறை உத்தரவு முதன்மைக் கல்வி அலுவலர்கள் 4 பேர் பணியிட மாற்றம்: 3 பேருக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: