இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ வக்கீல் முத்துசரவணன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் இதுவரை 47 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது. மாஜிஸ்திரேட், டாக்டர் உள்ளிட்ட இன்னும் 8 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பணியிடம் தற்போது காலியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக விசாரணையை முடிக்க மேலும் 5 மாத கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘இறுதி வாய்ப்பாக, நீதிபதி நியமனம் ஆனதில் இருந்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நீதிபதி நியமனமான 3 மாதத்தில் விசாரணையை முடிக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.